பேருந்து மீது ஏறி கூச்சல் எழுப்பிய மாணவர் : 10 மரக்கன்றுகளை நட்டு, 1 மாதத்திற்கு பராமரிக்க உத்தரவு

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி கொண்டாட்டத்தின் போது, பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டக் கல்லூரி மாணவர் துரைராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பேருந்து மீது ஏறி கூச்சல் எழுப்பிய மாணவர் : 10 மரக்கன்றுகளை நட்டு, 1 மாதத்திற்கு பராமரிக்க உத்தரவு
x
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில், கல்வியாண்டு தொடங்கிய நாளன்று நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சட்டக் கல்லூரி மாணவர் துரைராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாணவரின் எதிர்கால நலன் கருதி வழக்கை ரத்து  செய்ததோடு, சட்டக் கல்லூரியில் 10 மரக்கன்றுகளை நட்டு, ஒரு மாதத்திற்கு பராமரிக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்