மழை எதிரொலி - பல்வேறு இடங்களில் விபத்து
தமிழகத்தில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
* குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடும் மேகமூட்டம் காரணமாக, அரசு பேருந்து ஒன்று 30 அடி பள்ளத்தில் இறங்கியது. எதிரே வந்த லாரிக்கு வழிவிட முயன்ற ஓட்டுநர், பேருந்தை பள்ளத்தில் இறக்கியுள்ளார். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால், 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர்.
* சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதியதில் 10 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். .
* மத்தியபிரேதசத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* திண்டிவனத்தை அடுத்த ஒமிப்பேர் என்ற கிராமத்தில் மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி வாகனம், சாலையோர ஓடையில் கவிழ்ந்தது. இதில் 3 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் படுகாயமடைந்தனர்.
Next Story