பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆத்தூரில் அதிரூபன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சுதா, சரஸ்வதி, கணேசன் ஆகிய மூவர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர், மேலும் தீ பரவாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story