முருகனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் ரத்து : 3 மாதங்களுக்கு சலுகைகளை ரத்து செய்த‌ சிறைத்துறை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் முருகனுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறைச்சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
முருகனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகள் ரத்து : 3 மாதங்களுக்கு சலுகைகளை ரத்து செய்த‌ சிறைத்துறை
x
வேலூர் மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை செல்போன், சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உயர் பாதுகாப்பு பிரிவு 3 ல் இருந்து ஒன்றாம் அறைக்கு முருகன் மாற்றப்பட்டார். அவர் மீது சிறை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாதம் இருமுறை நடைபெறும் அவரது மனைவி நளினி உடனான சந்திப்பு, கடித போக்குவரத்து, உறவினர்கள், பார்வையாளர்கள் சந்திப்பு ஆகிய அனைத்து சலுகைகளும், அடுத்த 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் முருகன் காலி செய்த அறையில், சிறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், மேலும் 2 சிம் கார்டுகள், ஹெட்செட் ஆகியவை சிக்கியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்