முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் - எம்.ஜி.ஆர்.  நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது
x
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. அதன் நிறுவன வேந்தர் ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்ற  விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமாரும், செயலாளர் ரவிக்குமாரும் முதலமைச்சர் பழனிசாமிக்கு  பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும்  வரவேற்றனர். பின்னர் பேசிய ஏசி சண்முகம் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்