வெளிமாநிலத்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய கும்பல் கைது

திருத்தணியில் மோட்டார் வாகன ஆய்வாளரின் தகவல்களை பயன்படுத்தி , பலருக்கு ஓட்டுநர் உரிம‌ம் வழங்கி வந்த கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
வெளிமாநிலத்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய கும்பல் கைது
x
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாஸ்கரன். இவரது கட்டுப்பாட்டில் திருத்தணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த கணினி ஆப்ரேட்டர், ராஜா, மோட்டார் வாகன ஆய்வாளரின் அடையாள அட்டை, பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஜெயபாஸ்கரன், கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் விஷ்ணு , சக்திவேல் ஆகியோரை கைது செய்த போலீசார், இருவரையும் புழல் சிறையில்  அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்