சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது
x
சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சித்தாலப்பாக்கத்தில் கால் சென்டர் ஒன்று கடந்த 6 மாதங்களாக  செயல்பட்டு வந்துள்ளது. பொதுமக்களின் தொலைபேசி எண்களை பெற்று லோன் தருவதாக கூறி அவர்களின் ஆவணங்களை வைத்து இந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து தங்கள் பெயரில் வங்கியில் லோன் வாங்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கால்சென்டர் தான் என உறுதி செய்தனர். இதையடுத்து அங்கு வேலை பார்த்த 5 பெண்கள் உட்பட 15 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்