"கீழடி அருங்காட்சியகம் மிக பெரிய அளவில் அமைக்கப்பட வேண்டும்" - கவிஞர் வைரமுத்து

திமுக தலைவர் ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து சந்தித்தார்.
x
திமுக தலைவர் ஸ்டாலினை, கவிஞர் வைரமுத்து சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, திருவாரூரில் அமைய உள்ள கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் நிதியை அப்போது அவர் ஸ்டாலினிடம் அளித்தார் . அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கவிஞர் வைரமுத்து, தமிழை மேற்கோள் காட்டும் மத்திய அரசு, அதனை செயல்வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கீழடியில் மிகப்பெரிய  அளவில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையில், மாநில அரசுக்கும் உரிமை வேண்டும் என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, வைரமுத்து தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்