சலூன் கடையில் இளைஞர் திடீர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சரவணன் என்பவர் சலூன்கடையில் முடி திருத்தும்போது இளைஞர் திடீர் உயிரிழப்பு
சலூன் கடையில் இளைஞர் திடீர் உயிரிழப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சரவணன் என்பவர் சலூன்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடி வெட்டுவதற்காக இளைஞர் ஒருவர் வந்துள்ளார். முடிவெட்டிக்கொண்டிருந்த போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர் அஞ்சுகம் காலனியைச் சேர்ந்த வினோத் என்பதும்,  சிதம்பரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த அவருக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்