ஹெல்மெட்டுடன் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் : சுவர் ஏறி குதித்து திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்
தாம்பரம் அருகே தலையில் ஹெல்மெட், கையில் இரும்பு ராடுடன் சுற்றும் வட இந்திய நபர்கள் நாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பூட்டிய வீட்டில் இருந்து , டிவி உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன.
தாம்பரம் அருகே முடிச்சூர் முல்லை நகரை சேர்ந்த ஜெகதீசன் என்ற முதியவர் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது கவ்பார் எனப்படும் இரும்பு ராடு, தலையில் ஹெல்மெட்டுடன் இருசக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது நாய் குரைத்ததால், நாய் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்த அந்த மர் நபர்கள், வீட்டில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் பணம், 5 சவரன் தங்க நகைகள், எல்.இ.டி டிவி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த காட்சிகள், அருகே இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
Next Story