விடுதியில் கூடுதல் கட்டணம் வசூல் என புகார் : கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, இரவு நேரத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
விடுதியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, இரவு நேரத்தில், கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி விடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நள்ளிரவில் அவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். கூடுதல் கட்டணம், விடுதி வைப்பு நிதி, உணவுக்கட்டணம் செலுத்தியும், தங்களுக்கு முறையான வசதிகள் செய்து தரவில்லை, விடுதிக்கு மாணவர்கள் செலுத்திய எந்த ஒரு கட்டணமும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என  அவர்கள் குற்றம் சாட்டினர்.  போராட்டம் பற்றி தகவலறிந்த கல்லூரி முதல்வர் பத்மினி மற்றும் போலீசார்,  விடுதிக்கு வந்து மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் உறுதிமொழியை ஏற்று, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்