நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை
x
நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 2 வது நாளாக  வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். போதுப்பட்டி போஸ்டல் காலனியில் உள்ள தனியார் பள்ளியில், நீட் கோச்சிங் சென்டரும் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று, சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித் துறை அதிகாரிகள், பள்ளி அலுவலகம்,  நீட் கோச்சிங் சென்டர் மற்றும் பள்ளியின் தாளாளர், இயக்குனர்கள் வீடுகளில் சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்