ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஓமலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
x
தாரமங்கலம்  அருகே உள்ள  புளியமரத்துகாடு, மேட்டுகாடு, பாலிக்காடு, ஆகிய கிராமங்களில், கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருவதாக  கூறப்படுகிறது. இதில், புளியமரத்துகாட்டைச் சேர்ந்த  மாணிக்கம், கந்தசாமி, பாலிக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி  ஆகிய மூன்று  பேர்  உயிரிழந்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவனைக்கு செல்ல வழியில்லாமலும், அரசு மருத்துவ மனைக்கு சென்றால் நீண்ட நேரம் காத்திருக்க முடியாமலும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். எனவே, அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள்  கிராமத்தில் முகாமிட்டுட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்