"தமிழகத்தின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது" - சீன அதிபர் ஜி ஜின் பிங் பாராட்டு
இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார்.
இந்திய - சீன முறைசாரா உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது பேசிய சீன அதிபர் ஜி- ஜின் பிங், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருந்ததாக கூறினார். ஜின் பிங் - நரேந்திர மோடி தலைமையில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய ஜின் பிங், மிக சிறப்பான வரவேற்பை அளித்துள்ளதாகவும், இது போன்ற சந்திப்பு அடிக்கடி நிகழ வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்தியா- சீனா இடையே நல்ல உறவு ஏற்பட்டுள்ளது என்றும், கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கமாகி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தின் விருந்தோம்பல் குறித்து கேள்விப்பட்டுள்ளதாகவும், அதைத் தற்போது நேரில் கண்டறிந்தேன் என்றும் ஜின் பிங் பாராட்டினார்.
Next Story