கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கலையூரில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு
x
மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கலையூரில், முதுமக்கள் தாழி, சுடுமண் சிற்பம், ஆதி மனிதனின் பல் ஆகியவை கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் கீழடியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலையூரிலும், தமிழர்களின் நாகரீக வாழ்க்கைக்கு சான்றுகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் அமர்வு, மனு குறித்து மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்