காரமடை அரங்கநாதர் கோவில் நிதி வசூலில் முறைகேடு : உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் விசாரணை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
காரமடை அரங்கநாதர் கோவில் நிதி வசூலில் முறைகேடு : உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் விசாரணை
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறை தணிக்கை குழு அதிகாரிகள்  நேரில் விசாரணை மேற்கொண்டனர். பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏழு நிலை ராஜகோபுரம் அமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பணிகள் செய்ய நன்கொடைகள் வசூலிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்