பிரபல ரவுடியின் மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

சென்னையில் பிரபல ரவுடியின் மகனை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
பிரபல ரவுடியின் மகன் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தோட்டம் சேகர். பிரபல ரவுடியான இவர், கடந்த 2014ம் ஆண்டு எதிரிகளால் கொல்லப்பட்டார். இவருடைய  மனைவி மலர்,  மகன் அழகு. இந்நிலையில், ரிச்சி தெரு அருகே டேம் சாலையில் இருசக்கர வாகனத்தில் அழகு தனது தாய் மலர் மற்றும் நண்பர் ஆறுமுகம் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியது. இதனால், அப்பகுதியில் 
பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து, அந்தக் கும்பல் 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த அழகு பாதுகாப்பு கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். தாய் மலர், ஆறுமுகம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்