என்ஜினீயர் எனக் கூறி, பாலிடெக்னிக் மாணவியை காதலித்து பலாத்காரம் செய்த கொத்தனார்

கன்னியாகுரி மாவட்டம் கொல்லங்கோட்டில் பாலிடெக்னிக் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த கொத்தனாரின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறது இந்த தொகுப்பு
என்ஜினீயர் எனக் கூறி, பாலிடெக்னிக் மாணவியை காதலித்து பலாத்காரம் செய்த கொத்தனார்
x
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்  கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். வறுமையும் குழந்தைகளின் கல்வியும் அவரை பயமுறுத்த  மகள் மற்றும் மகனை தனது அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றவர் மகளை பாலிடெக்னிக் படிக்க வைத்துள்ளார். அப்போது என்ஜினியர் என கூறி மாணவியை ஒருவன் சூறையாடி இருப்பது பெரும் சோகம்.விதவிதமான பைக்கில் வந்த வெளியூர் இளைஞன் ஒருவன்  மாணவியை மயக்கி உள்ளான். என்ஜினியர் என அறிமுகமான அவன் மாணவியின் குடும்பச் சூழல், அவரது அம்மா வெளிநாட்டில் உள்ளது என அனைத்தையும் அறிந்து காதல் வலை வீசியுள்ளான். இந்நிலையில் திடீரென கல்லூரியில் இருந்து வீடு திரும்பாத பேத்தி குறித்து போலீஸில் பாட்டி புகாரளித்துள்ளார். அதன் பேரில் சந்தேகமடைந்த போலீசார் மாணவியின் பக்கத்து வீட்டு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில்  அந்த பெண்ணின் உதவியுடன் மாணவி கடத்தப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. பக்கத்து வீட்டு பெண்ணின் அக்கா மகனான சுஜின் சித்தியின் துணையுடன் தனது சித்து விளையாட்டை அரங்கேற்றியிருக்கிறார். நாகர்கோவில் அருகே தங்கியிருந்த அவர்களை பிடித்து சிறுமியை மீட்ட போலீசார் கடத்திய சுஜினை பிடித்து விசாரித்தனர். அதில் கொத்தனார் வேலை பார்க்கும் சுஜின் மாணவியின் அம்மா வெளிநாட்டில் இருப்பதால் பணத்துக்காக காதலித்ததும் இருவரும் பலமுறை தனிமையில் இருந்ததும் தெரியவந்தது.  மாணவியின் சங்கிலியை வாங்கி அடகு வைத்த பணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. போலியான வசீகரங்களை நம்பி ஏமாறுவதை பெண்கள் எப்போது நிறுத்துவார்களோ...? என போலீசார் நொந்து கொள்கின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்