சிதம்பரம் அருகே சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரும் விவசாயிகள்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சந்திரன் வாய்க்காலை விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சந்திரன் வாய்க்காலை, விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர். இங்கு வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில், பல முறை கோரிக்கை விடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சந்திரன் வாய்க்காலை விவசாயிகள் ஒன்று சேர்ந்து 7 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வாரி வருகின்றனர். இதன் மூலம் சுமார் பத்தாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் போர்கால அடிப்படையில் அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story