2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு, ஆய்வு கூட்டத்திற்கு பின் தெரிவித்துள்ளது.

நாசிக், ஆந்திராவில் இருந்து வெங்காயம் வந்துகொண்டிருக்கிறது என்றும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்றும் ஆய்வு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு அறிக்கை
x
வெங்காயம் வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பொருள் சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். மழையின் காரணமாக  நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்த‌தன் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் அதிக அளவில் லாரிகளில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்