கழிவறையில் மறைந்து செல்போனில் உரையாடல் - புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புழல் மத்திய சிறையில் சிறப்பு சோதனை குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறையில் மறைந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதிகள் கேப்ரியல், சுந்தரமூர்த்தி ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story