சுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
x
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளைய தலைமுறை அமைப்பினர் பள்ளிக்கரணை வார்டு அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் இருக்கபோவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக காவல்துறையினர் நாளை மறுதினம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்