நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் : மேல்மட்டத்தில் இருப்பவர்களும் உடந்தை
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களும் உடந்தை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்களும் உடந்தை என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் தென்மண்டல மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தமிழகத்தில் நீட் தேர்வில் அதிக கெடுபிடி காட்டி கேவலப்படுத்துவதாகவும், ஆனால் வடமாநிலங்களில் ஆள்மாறாட்டம் மோசடி செய்து மருத்துவ கல்லூரிகளில் சேருவதாகவும் குற்றஞ்சாட்டினார். நீட் தேர்வில் சாதாரணமாக ஆள்மாறாட்டம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள மருத்துவர் ரவீந்திரநாத், மேல்மட்டத்தில் இருக்கும் பலரும் இதற்கு உடந்தையாக உள்ளதாக புகார் தெரிவித்தார். இதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story