மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி - சுகாதாரத்துறை ஆய்வு செய்யக் கோரிக்கை

மதுரை திருமங்கலம் அடுத்த சுந்தரம்குண்டு கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் பலி - சுகாதாரத்துறை ஆய்வு செய்யக் கோரிக்கை
x
மதுரை திருமங்கலம் அடுத்த சுந்தரம்குண்டு கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் கலந்து வரும் குடிநீரை அருந்துவதே, நோய் பரவலுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊரின் நடுவே குட்டை வெட்டி தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவுநீர், மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுவதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்