நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு
x
காரைக்குடி செக்காலை வாட்டர்டேங் அருகே மளிகை கடை ஒன்றில் 6 ஆயிரம் திருட்டு போயுள்ளது. இது குறித்த விசாரணையில் சிசிடிவியை ஆராய்ந்த போது ஒரு வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணத்தை திருடியது தெரிய வந்தது. கடைக்கு வந்த பொருட்களை வாங்கிய பின்னர் தம்பதியில் ஆண் நபர் கல்லாவில் உள்ள பெண்ணிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் C சீரியல் உள்ளதா என பார்க்க வேண்டும் எனக்கூறி பேச்சுக் கொடுத்துள்ளார். அந்த பெண் 2 ஆயிரம் ரூபாய் இல்லை என்ற போதும் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தவே அவர் கல்லாவுக்கு அடியில் வைத்திருந்த பண பையை எடுத்து காட்டியுள்ளார். பையில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் இருந்த போதும் பணத்தை அந்த பணி பெண் கையில் இருந்து வாங்கி பார்ப்பது போல நடித்து அதிலிருந்து 6 ஆயிரம் ரூபாயை எடுத்து தன்னுடைய பர்ஸில் வைத்துள்ளார். இதே நேரம் அவருடன் வந்த பெண் நபர் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் செல்பி எடுப்பது போல கவனத்தை திசை திருப்பியுள்ளார். இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தம்பதி கடந்த வாரம் முத்துப்பேட்டையில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் 30 ஆயிரம் ரூபாயை இதுபோல திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் போலீசார் வெளிநாட்டு தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்