காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு நெஞ்சுவலி

கள்ளக்குறிச்சி அருகே பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு தலைமை காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு நெஞ்சுவலி
x
கள்ளக்குறிச்சி அருகே பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு தலைமை காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலரான பாஸ்கர், நேற்று இரவு ரோந்து பணி முடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்  ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்