காவல் நிலையத்தில் தலைமை காவலருக்கு நெஞ்சுவலி
கள்ளக்குறிச்சி அருகே பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு தலைமை காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே பணியின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு தலைமை காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சிராயப்பாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலரான பாஸ்கர், நேற்று இரவு ரோந்து பணி முடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை சக காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Next Story