கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மொத்தம் 5 ஆசிரியர்களே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரியின் வாய்மொழி உத்தரவின்பேரில் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story