சென்னையில் கொலை வழக்கில் தொடர்புடையவரை சுற்றிவளைத்த போலீசார் - மண்டபத்திற்குள் புகுந்து அதிரடியாக கைது
சென்னையில் பிரபல ரவுடி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கொலை வழக்கில் தேடப்படும் நபரை மண்டபத்தில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டத்தில், நேற்று பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் மகள் மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, காஞ்சிபுரத்தை சேர்ந்த பல கொலை வழக்குகளில் தேடப்படும் பாட்டில் பாஸ்கர், வர இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மண்டபத்தை நோட்டமிட்டபடி போலீசார் கண்காணித்து வந்தனர். போலீசார் எதிர்பார்த்த படியே, பாட்டில் பாஸ்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மண்டபத்திற்கு வந்தார். அப்போது, போலீசார் மண்டபத்திற்குள் புகுந்து அதிரடியாக பாட்டில் பாஸ்கரை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர். இதனால் சுபநிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில், பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
Next Story