திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை கிராம மக்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
நாகை மாவட்டம், திருநகரி கிராமத்தில் விளை நிலங்களில் குழாய் பதிக்க வந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை, கிராம மக்கள் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓன்.என்.ஜி.சி நிறுவனம் மாதானம் முதல் மேமாத்தூர் வரை குழாய் பதித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருநகரி கிராம மக்கள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், சாகுபடி பணிகள் மு டிந்த பின்னர் பணியை தொடர வலியுறுத்தினர். ஆனால், ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரி ஒருவர் கிராம மக்களிடம் அலட்சியமாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் அவரை அங்கிருந்து அடித்து விரட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்