தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
x
வேலூர்

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார  பகுதிகளில் மூன்றாம் நாளாக கனமழை பெய்தது. குறிப்பாக கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக  மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

Next Story

மேலும் செய்திகள்