ஜெயங்கொண்டம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x
கர்நாடக மாநிலம் ஜோலார் மாவட்டம் மாஸ்தி கிராமத்தை சேர்ந்த 7 பேர், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு நேற்று  காரில் வந்துள்ளனர். அந்த காரை ஆனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். நாகேந்திரன், அனில்குமார், ஸ்ரீகாந்த்,  நந்தகுமார்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் உட்பட ஏழு பேர் வந்துள்ளனர். அதிகாலை ஜெயங்கொண்டம் அடுத்த தழுதாழைமேடு அருகே வந்த போது,  எதிரே வந்த லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆனந்தகுமார், நாகேந்திரன், அனில்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்