"எந்த சிலையும் காட்சி பொருட்கள் அல்ல" - பொன் மாணிக்கவேல்

அமெரிக்காவில் மட்டும் திருடப்பட்ட சிலைகள் 1000 இருப்பதாகவும் ஒத்துழைப்பு கொடுத்தால் சிலைகளை விரைவாக மீட்கலாம் என்றும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
x
37 ஆண்டுகளுக்கு முன் கல்லிடைக்குறிச்சியில் திருடுபோன சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று சென்னை வந்தடைந்தது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த சிலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பூஜைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன் மாணிக்கவேல், அமெரிக்காவில் மட்டும் 1000 சிலைகள் இருப்பதாகவும், சிலைகளை மீட்க கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.

70 ஆண்டுகளுக்கு முன் திருடு போன பல கோடி மதிப்புள்ள செம்பியன் மாதேவி சிலை மற்றும் நடராஜர் சிலை உள்ளிட்ட 20 முக்கிய சிலைகள் குறித்து கடிதம் எழுதியதாக தெரிவித்த அவர், ஒத்துழைப்பு வழங்கினால் விரைவாக சிலைகள் தாயகம் வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்