மேகாலயா தலைமை நீதிபதியை நியமிக்க உத்தரவிட வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பிக்குமாறு வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேகாலயா தலைமை நீதிபதியை நியமிக்க உத்தரவிட வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
இது தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆதீஷ் அகர்வாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவி நிரப்பப்படாததால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுகொள்ள வேண்டும் என்று கூறிய அவர்,  கொலிஜியம் பரிந்துரையின் படி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  ஏ.கே. மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பான உத்தரவை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்