தனியார் விடுதி பெண் உரிமையாளருக்கு மிரட்டல் - புகாரை வாங்க போலீசார் மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தகவல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றை நிர்மலா என்பவர் நடத்தி வருகிறார்.
தனியார் விடுதி பெண் உரிமையாளருக்கு மிரட்டல் - புகாரை வாங்க போலீசார் மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தகவல்
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தனியார் தங்கும் விடுதி ஒன்றை நிர்மலா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட  வாசு என்பவர்  தகாத வார்த்தைகளால் பேசியதோடு, சில வரம்பு மீறிய செயல்களை செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிர்மலா அளித்த புகாரை வாங்க போலீசார் மறுத்துள்ளதாக நிர்மலா தெரிவித்துள்ளார். புகாரை வாங்கி நடவடிக்கை எடுக்க தொடர்ந்து போலீசார் மறுக்கும் நிலையில், காவல்நிலையம் முன்பு தீக்குளிக்கப் போவதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்