ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? - மு.க. ஸ்டாலின் கேள்வி

ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தினால் போதும் ரெயில்வேயின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரயில்வே தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? - மு.க. ஸ்டாலின் கேள்வி
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கேள்வித்தாள், மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது. என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 

ரயில்வேயின் இந்த அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக கூறியுள்ள மு.க. ஸ்டாலின்,

தபால் தேர்வை தமிழில் நடத்த முடியும் என்கிற போது, ரயில்வே தேர்வுகளை தமிழில் ஏன் நடத்த முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட வேண்டாம் என்றும், ரயில்வேயில் தமிழ் மொழியை புறக்கணித்து, மீண்டும் மொழி போராட்டத்திற்கு களம் அமைத்து தர வேண்டாம் என்றும் தமது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்