திருச்சி புங்கனூரில் கேட்பாரற்று கீழே கிடந்த ரூ.50,000. - ஆசிரியரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்

திருச்சி புங்கனூரில் கேட்பாரற்று கீழே கிடந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை புனித வளனார் தொடக்கப்பள்ளி மாணவிகள் ஆசிரியர்களிடம் வழங்கினர்.
திருச்சி புங்கனூரில் கேட்பாரற்று கீழே கிடந்த ரூ.50,000. - ஆசிரியரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகள்
x
திருச்சி புங்கனூரில் கேட்பாரற்று கீழே கிடந்த, ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, புனித வளனார் தொடக்கப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்களிடம் வழங்கினர். இப்பள்ளியில், தூய்மை பாரதம் விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, மாணவிகள் கனிஷ்கா, மதுஸ்ரீ ஆகியோருக்கு, ஐம்பதாயிரம் ரூபாய் கீழே கிடைத்துள்ளது. உடனே அதனை கையில் எடுத்த மாணவிகள், தலைமையாசிரியர் மெடில்டாவிடம் கொடுக்க, அந்த பணம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஆசிரியர் தினத்தின் போது, மாணவிகளின் இச்செயல் பள்ளியில் மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்