25 ஆண்டுகளுக்கு தி.மு.க. ஆட்சியை தொட முடியாது - ஸ்டாலின்

25 ஆண்டுகளுக்கு தி.மு.க. ஆட்சியை யாராலும் தொட முடியாது என்ற நிலை தமிழகத்தில் வரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், வேலூர் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வென்றதை ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்வதை சுட்டிக் காட்டியதோடு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்துள்ளதால், ஆட்சியை விட்டு அதிமுகவினர் விலகி விடுவார்களா என கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் இதே நிலைதான் தொடர்ந்திருக்கும் என கூறிய ஸ்டாலின், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெறும் எனவும், அதன்பிறகு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தி.மு.க. ஆட்சியை தொட முடியாது என்ற நிலை வரும் என்றும் தெரிவித்தார். வெளிநாட்டு முதலீடும், வேலைவாய்ப்பும் வந்தால் முதலமைச்சருக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும்  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்