நீலகிரியில் நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதி

நீலகிரியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
நீலகிரியில் நீடிக்கும் மழை - பொதுமக்கள் அவதி
x
நீலகிரியில் மழை காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது .
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊட்டி, முதுமலை, கூடலூர், பந்தலூர்,அவலாஞ்சி, எமரால்டு, ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி - கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி



புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களான வில்லியனூர், அரியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

கடலூர் : கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி



கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அதிக வெயில் அடித்த நிலையில் மாலை 6:30 மணிமுதல் கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Next Story

மேலும் செய்திகள்