சிவகாசியில் சாலைகளை சீரமைக்க கோரி முற்றுகை : அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சிவகாசியில், சாலைகளை சீரமைக்க கோரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசியில் சாலைகளை சீரமைக்க கோரி முற்றுகை : அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
சிவகாசியில், சாலைகளை சீரமைக்க கோரி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக  குழிதோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த பின்னும் சாலைகளை சீரமைக்காததால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். அதிலும் பிஎஸ்ஆர் சாலை மற்றும் சண்முகம் சாலையில் பள்ளிகள் முன் சாலை சீரற்று கிடப்பதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, காவல்துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

 



Next Story

மேலும் செய்திகள்