கரூர் : நீதிமன்றத்தில் குடியேறிய பெண்ணால் பரபரப்பு

குளித்தலையில் பெண்மணி ஒருவர், ஒரு கோடி ரூபாய்க்கு நீதிமன்ற கட்டிடத்தை விலைக்கு வாங்கியதாக கூறி, குடியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் : நீதிமன்றத்தில் குடியேறிய பெண்ணால் பரபரப்பு
x
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே, சார்பு நீதிமன்றத்தின் பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. கேட்பாரற்ற நிலையில் உள்ள, இந்த கட்டிடத்தில்,  பெண் ஒருவர் குடியேறி, பால் காய்ச்சியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்தபோது, அந்த பெண்ணின் பெயர் மீனாட்சி எனவும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து கட்டிடத்தை விலைக்கு வாங்கியதாகவும் தெரிவித்தார். அதன்பிறகே, அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் ஆட்டோவில் அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்