பெண் சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் குளறுபடி : ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண் சத்துணவு அமைப்பளார் நியமனத்தில் அலட்சியமாக செயல்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் குளறுபடி : ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 2007 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆண்டாள் என்ற பெண் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் பின்னர் அப்பதவியானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறி பணியில் சேர அவருக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு பிறப்பிக்கப்பட்ட பணி நியமன ஆணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி ஆண்டாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரர் தற்போது பணிநியமனத்திற்கான வயதை தாண்டிவிட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியர்களும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அதிகாரியும் பத்து லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க கோரி உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்