விரைவில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் - முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் தீவிரமடைந்துள்ளது.
x
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ராதாமணி 3 மாதத்துக்கு முன்பு காலமானதை  தொடர்ந்து, அந்தத் தொகுதி காலியாக உள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள கிடங்கு திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 550 கன்ட்ரோல் யூனிட் மற்றும், 550 விவிபேட் இயந்திரங்கள் சரி செய்யும் பணி தொடங்கியது. முன்னதாக விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்