ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகள் இருவரும் பலியாகினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, மகள் இருவரும் பலியாகினர். நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தீயணைப்பு  நிலைய அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் மில்டன் ஜெயக்குமார். இவரது மகள் ரெனி லாரோஸ். இவர்கள் இருவரும் சேலத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியில் கார் வந்த போது எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தந்தையும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்