ஓமலூர் : 60அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
ஓமலூர் அருகே, 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினைமாடு ஒன்றை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஓமலூர் அருகே, 60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினைமாடு ஒன்றை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். காமண்டப்பட்டி என்ற கிராமத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவிந்தசாமி என்பவரது கிணற்றில் விழுந்த அந்த பசுமாட்டை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி மீட்டனர்.
Next Story