விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்

விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், 150 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரிய கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்
x
விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், 150 கிலோ எடையுள்ள ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சி பிள்ளையார் ஆகியோருக்கு தலா 75 கிலோ எடையுடைய 2 பிரம்மாண்ட கொழுக்கட்டைகள் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கொழுக்கட்டையானது பச்சரிசி மாவு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும். இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் திங்கட்கிழமை தொடங்கி, 14 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்