9ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
9ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜலகண்டபுரத்தை அடுத்த கரிக்காப்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்த மாணவி, பள்ளியில் இருந்து வீடு திரும்பாத நிலையில், கடந்த 22ம் தேதி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். வழக்கு பதிவு செய்து தேடி வந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் 21 வயது மகன் மோகன்ராஜை சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் பதுங்கியிருந்த மோகன்ராஜிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்