விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர்.
விழுப்புரம் : ஏலச்சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி - 2 பேர் கைது
x
விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். விழுப்புரம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வேலு, அவரது மனைவி கிருஷ்ணவேணி மகன் கணேசன் மற்றும் உறவினர் பிரபாகரன் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி, 5 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு வந்த கிருஷ்ணவேணியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பிரபாகரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்