திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை : பயணிக்கு அடி- உதை
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் மதுபோதையில் வந்து, போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தில் பயணி விஜய் என்பவருக்கு அடி- உதை விழுந்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, பயணி விஜய்- ஐ மீட்டனர். திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு அரசு பேருந்தில் செல்ல வந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயணி விஜய், மதுபோதையில் இருப்பதை திண்டுக்கல் போலீசார் உறுதி செய்தனர். இரு தரப்பிலும் போலீசில் புகார் கொடுத்துள்ளதால், தற்போது விசாரணை நடந்து வருகிறது.
Next Story