தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக புகார்

தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக கூறி கைகளில் இரும்பு சங்கிலி கட்டி ஆட்சியர் முன்பு ம.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக புகார்
x
தூத்துக்குடியில் குடிமராமத்து பணியில் முறைகேடு நடப்பதாக கூறி கைகளில் இரும்பு சங்கிலி கட்டி ஆட்சியர் முன்பு ம.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்  நடைபெற்றது இதில் பங்கேற்ற மதிமுக விவசாயிகள் சங்கத்தினர்,  கைகளில் இரும்பு சங்கிலி கட்டிகொண்டு ஆட்சியர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர் நிலைகள் தூர்வாரும் பணியில் முறைகேடு நடப்பதாகவும், அதனை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்