சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரி உயர்வுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. வேலு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்தது.
சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சொத்து வரி  உயர்வுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ.   வேலு தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்தது. மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளில்  குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரியை 50 சதவீதமும்,  குடியிருப்பு அல்லாத பகுதிகளுக்கு 100 சதவீதமும் உயர்த்தி கடந்த 2018 ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து  எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை  விசாரித்த நீதிபதிகள் அனைத்து அம்சங்களையும் தீர ஆராய்ந்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதில் பாரபட்சம் இல்லை என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்